ஒரே நாளில் 529 பேருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு..!D
Posted By: UnknownPublished: 03:41
எகிப்தின் முன்னாள் அதிபர் முகமது மோர்சி ஆதரவாளர்கள் 529 பேருக்கு மரண தண்டனை விதித்து, அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மக்களுக்கு அளித்த வாக்குறுதியை காப்பாற்ற தவறியதாக எகிப்து நாட்டு அதிபர் முகமது மோர்சிக்கு எதிராக கடந்த ஜூலை மாதம் பல்வேறு போராட்டங்கள் நடந்ததன.
இதைத்தொடர்ந்து, அந்நாட்டு ராணுவத்தால் அவரது பதவி பறிக்கப்பட்டது .இதற்கிடையே ராணுவத்தை எதிர்த்து மோர்சியின் ஆதரவாளர்கள் போராட்டங்களை தொடங்கினர்.
இதைத்தொடர்ந்து, அந்நாட்டு ராணுவத்தால் அவரது பதவி பறிக்கப்பட்டது .இதற்கிடையே ராணுவத்தை எதிர்த்து மோர்சியின் ஆதரவாளர்கள் போராட்டங்களை தொடங்கினர்.
இதில் காவல் துறையை சேர்ந்தவர் ஒருவர் உயிரிழந்ததுடன், ஏராளமானோர் படுகாயமடைந்தனர் மேலும் ஏராளமான பொதுச்சொத்துகளும் சேதமடைந்தன.
இது தொடர்பாக மோர்சியின் ஆதரவாளர்கள் என கருதப்படும் ஏராளமானோர் கைது செய்யப்பட்டதுடன், அவர்கள் மீது எகிப்தில் உள்ள மினியா நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், முதல் கட்டமாக 529 பேர் மீதான வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
இது தொடர்பாக மோர்சியின் ஆதரவாளர்கள் என கருதப்படும் ஏராளமானோர் கைது செய்யப்பட்டதுடன், அவர்கள் மீது எகிப்தில் உள்ள மினியா நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், முதல் கட்டமாக 529 பேர் மீதான வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
இதில் குற்றம் சாட்டப்பட்ட 529 பேருக்கும் மரண தண்டனை விதித்து எகிப்தின் மின்யா நீதிமன்றம் உத்தரவிட்டது. அப்போது 150-க்கும் மேற்பட்டோர் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர். இந்த வழக்கில் 16 பேர் மட்டும் விடுவிக்கப்பட்டனர் இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட மேலும் 700 பேர் மீதான விசாரணை இன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த வழக்கில் தன்னை ஆஜராக அனுமதிக்கவில்லை என்று குற்றவாளிகள் தரப்பு வக்கீலான முகமது சுபேப் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.எகிப்தில் ஒரே நாளில் 529 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் உலக நாடுகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த வழக்கில் தன்னை ஆஜராக அனுமதிக்கவில்லை என்று குற்றவாளிகள் தரப்பு வக்கீலான முகமது சுபேப் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.எகிப்தில் ஒரே நாளில் 529 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் உலக நாடுகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
0 comments:
Post a Comment