யார் பணம் கொடுத்தாலும் வாங்கிக்கிட்டு எங்களுக்கு ஓட்டு போடுங்க: கெஜ்ரிவால் !
Posted By: TamiL MoviE RoaminGPublished: 22:36
யார் பணம் கொடுத்தாலும் வாங்கிக் கொண்டு எங்களுக்கு வாக்களியுங்கள் என்று ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். உத்தர பிரதேச மாநிலம் அமேதி தொகுதிக்குட்பட்ட ராணிகஞ்சில் உள்ள சுக்லா பஜாரில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது.
அதில் கலந்து கொண்ட அக்கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் மக்களிடையே வாக்கு சேகரித்தார்.
அப்போது அவர் கூறுகையில்,
தேர்தல் வருகிறது. அவர்கள் பணம் கொடுத்தால் வாங்கிக் கொள்ளுங்கள். நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாத்தித்த பணம் அது. அவர்கள் 2ஜி மற்றும் காமன்வெல்த் ஊழல் மூலம் கொள்ளையடித்த பணம்.அவர்கள் சேலைகள் மற்றும் போர்வைகள் ஆகியவை கொடுத்தாலும் வாங்கிக் கொள்ளுங்கள்.
ஆனால் அவர்களுக்கு வாக்களிக்காதீர்கள். எங்களுக்கு வாக்களியுங்கள். அதிசயத்திற்கு வாக்களியுங்கள்.பாஜகவும், காங்கிரஸும் கைக்கோர்த்து செயல்படுகின்றன. பாஜக என்னையும், காங்கிரஸ் அமேதி தொகுதி ஆம் ஆத்மி கட்சி வேட்பாளரான குமார் விஷ்வாஸையும் தாக்கியது எப்படி?
காங்கிரஸ் மோடியையோ அல்லது பாஜகவையோ தாக்கியதாக அல்லது காந்தி குடும்பத்தை மக்கள் தாக்கியதாக நீங்கள் கேள்விப்பட்டிருக்கவே மாட்டீர்கள்.தேர்தல் முடிந்த பிறகு ராகுல் காந்தி இந்த தொகுதிக்கு திரும்பி வர மாட்டார். பாஜக வேட்பாளரான ஸ்மிரிதி இரானி தொலைக்காட்சி சீரியல்களில் நடிக்கப் போய்விடுவார் என்றார் கெஜ்ரிவால்.
0 comments:
Post a Comment